Monday, July 21, 2008

உரையாடல்

அலைபேசியில் நீ
அழைப்பதற்கான அழைப்பொலி.
எடுத்தவுடன் பேச வேண்டுமென
எத்தனையோ விஷயங்களை
பட்டியலிடுகிறேன்.
உன் குரல் கேட்டவுடன்
அவையனைத்தும் மறந்து போய்
"நீயே பேசு. நான் வெறுமனே கேட்கிறேன்"
என்று விடுகிறேன்.

இவண்
பாலாஜி

No comments: